சிட்டிகா

Friday 6 May 2011

சின்ன சின்ன கவிதைகள்



நீர்ப்பூக்கள்


எறிந்த கல் 
தூரிகையானதோ?
நீரில் பூக்கள்



தேங்காய்



ஓங்கி அடித்தாலும்
வெள்ளையாய் சிரிக்கிறதே
தேங்காய்!!!


தற்கொலை



மலை ஏறினான் 
ஜாக்கிரதையாக
தற்கொலைக்கு



பிள்ளையார் சுழி


கடவுள் இல்லை 
தலைப்பு கவிதப்
போட்டியை 
பிள்ளையார் சுழியுடன்
ஆரம்பித்தான் மாணவன்



பசி

வெறும் வயிறோடு
படுக்கவில்லை
வயிறு நிறைய பசி


வறுமை


புகைப்பது தீமையாம்
புகையவில்லை 
அடுப்பு


No comments:

Post a Comment